
# கை தொட முடியா உச்சி மரமும், கால் மிதிக்கும் நெடுந்தடியாய் - ஆற்றின் குறுக்கே.
# முகில்கள் முட்டி மலைகள் அழுகிறது - மனசு.
# மலைகளின் மடுக்களில் மண்குடிசைகள் - நம்பிக்கை என்பது சரியாது.
# குடிசை வீட்டு குப்பி விளக்கு கும்மிருட்டிலும் - நாளைய வெளிச்சத்துக்காய்..
# ஆடாத தலைகளையே ஆடவைக்கும், தானாடாது - புகைவண்டி.
# காவி நிறத்தில் கண்ணாடிக்குடுவை ; உள்ளே இருப்பது தேநீரா, தெளி நீரா? - தெருவோரக்குழந்தை.
# நவக்கிரகங்களுக்கு நாலு சுவர் இல்லாதது நானும் நீயும் எதிர் எதிரே ....
# நீல வானம், வெண் மேகம், கரு காகம் - எதுவும் தனித்து அழகில்லை.
# அருவியின் அழகு தினமொரு வண்ணம்; யாருக்கு தெரியும் அத்தனையும் அழுக்கு என்று.
# புலியும் சிங்கமும் எலியின் வாலில் - பட்டம்.
# இணையாமல் சுழல்கிற இரு சக்கரங்கள் - பணம் , குணம். அசையாமல் தவிக்குது வண்டி - பூமி.
# தலைவர்கள் வருகை குப்பை தொட்டிகளுக்கு - சுவர் ஒட்டிகளில்.
# இலைகளே அற்ற கிளைகளில் பூக்கள் - கொக்குகள்.
its nice Thubakaran .expecting more from u .dnt give up ,continue . good luck.
பதிலளிநீக்குKeep writing... love to read writings...
பதிலளிநீக்கு